இருபது ஆண்டுகளாக வங்கதேசத்தைக் கட்டியாண்டார் ஷேக் ஹசீனா. ஆனால், அவருக்கு எதிரான மாணவர்களின் ஒரு மாத காலப் போராட்டம், நாடற்றவராக அவரை மாற்றியிருக்கிறது. முதன்முறை ஆட்சியைப் பிடித்தபோது மக்களின் ‘நம்பிக்கை நாயகியாக’ இருந்த ஷேக் ஹசீனா, இன்று `சர்வாதிகாரி’ என்ற பட்டத்துடன் நாட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்!